An interesting poetry enjoyed recently - NMA Jabbar
கைரேகைகலில்
சிக்கல் விழுந்துவிட்ட
இந்தக் காலத்திலும்
குலம் என்கிறாய்
கோத்திரம் என்கிறாய்
உன்குலத் தொழிலைத்தான்
செய்துகொண்டிருக்கிராயா நீ?
உஞ்ச விருத்தி செய்துதான்
உயிர் வாழ்கிறானா பிராமணன்?
ஆட்சி பீடம் தவிர
வேறெங்கும் அமர்வதில்லையா சத்ரியன்?
வைசியன் மட்டும்தான்
தராசு பிடிக்கிறனா?
ஏர் ஒட்டுகிரவனெல்லாம்
சூத்திரனா?
வயிற்ற்றுக்காக முந்தானை விரிக்கத் தொடங்கிவிட்ட பிறகு
இன்னும் எதற்கு
பத்தினிப் பட்டம்?
ஞானிகள் செய்ய முடியாததை
விஞ்ஞானி செய்துவிட்டான்.
இதோ
நீயே மழித்துக்கொள்கிறாய் ;
நீயே துவைத்துகொள்கிறாய்;
ஏன்
கழிப்பறையைக் கூட
நீயே கழுவிவிடுகிறாய்.
இனி
யாரைப் பார்த்து
"எட்டி நில்," என்பாய்?
--- கவிக்கோ அப்துல் ரகுமான்
"சுட்டு விரல்"நூலில் இருந்து
உஞ்ச varuthi seythu than
No comments:
Post a Comment